Thursday, September 22, 2011

"டிவிட்டர், பேஸ்புக்' உதவியை நாடுகிறது தேர்தல் கமிஷன்


ஓட்டளிப்பதன் அவசியம் பற்றி வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, "டிவிட்டர், பேஸ்புக்' ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். உள்ளாட்சி தேர்தலில், விழிப்புணர்வு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக, தமிழக தேர்தல் கமிஷனின் செயலர் சேவியர் கிறிசோ நாயகம், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தொலைத் தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்தி, ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும்படி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பாக, தங்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வேண்டுகோள் விடுக்க முன்வந்துள்ளன. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சினிமா தியேட்டர்களில், "சிலைடு' காட்டுவதன் மூலம், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், தட்டிகள் வைக்கலாம். மின்னஞ்சல் மூலமும், டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றின் மூலமும், வாக்காளர்களை ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லாத "டிவி'யில் இலவச விளம்பரம்!தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில வாரங்களிலேயே, உள்ளூர் சேனல்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன. இன்று வரை, எந்த மாவட்டத்திலும் உள்ளூர் சேனல் ஒளிபரப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் கமிஷன், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், உள்ளூர் சேனல்களில், இலவச விளம்பரம் செய்து கொள்ளும்படி, அறிவுறுத்தியுள்ளது. இல்லாத, "டிவி'க்களில் இலவச விளம்பரம் செய்யும்படி, தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை கண்டு, தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Monday, August 29, 2011

அதற்குள் எதற்கு அவசர அவசரமாக தூக்கு தண்டனை


nnai
அதற்குள் எதற்கு அவசர அவசரமாக தூக்கு தண்டனை
1. ராஜீவின் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் முண்டியடித்துக்கொண்டு, அவருடன் நின்று போஸ் கொடுத்து தன் கோஷ்டியை வலுப்படுத்திகொள்ளும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சரியாக குண்டு வெடிக்கும் நேரம் ராஜீவை தனியே விட்டது ஏன்? ராஜீவின் நிகழ்ச்சி நிரலில் முதலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூர், திடீரென சேர்க்கப்பட்டது ஏன்?

2. ராஜீவ் 1991 மே 21ல் கொலை செய்யப்படுகிறார். அதற்கு முந்தைய நாள் இரவு சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்பிரமணியசாமி, அவசராவசரமாக டெல்லி செல்ல வேண்டும் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். ஆனால் மறுநாள் வரை அவர் டெல்லி செல்லவில்லை. இடையில் அவர் சென்றது எங்கே? சந்திராசாமியை சென்னையில் சந்தித்ததாகவும், இருவரும் பெங்களூர் சென்றதாகவும் ஜெயின் கமிசனில் எழுந்த குற்றச்சாட்டுக்கு இன்று வரை சுவாமி பதிலளிக்கவில்லை. அவர்கள் பெங்களூர் சென்றது சிவராசன் குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவா?

3. சந்திராசாமியின் பின்புலத்தில், கர்நாடக காங்கிரஸ்காரரான மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

4. ராஜீவ் கொலை நடந்தது இரவு 10.10 மணிக்கு. மூப்பனார் மற்றும் ஜெயந்தி நடராஜனால் ராஜீவ் உடல் கண்டெடுக்கப்பட்டு, அவர் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது 10.40 மணிக்கு. ஆனால் 10.25க்கு தன் கட்சிக்காரர் திருச்சி வேலுச்சாமியிடம் ஃபோனில் பேசிய சுப்பிரமணியசாமி ‘ராஜீவ் செத்துட்டார்?’ என்கிறார்.இந்தியாவில் யாருக்குமே தெரியாத அந்தத் தகவல் சுவாமிக்கு தெரிந்தது எப்படி? ஜெயின் கமிசன் விசாரணையில் இந்த விசயம் கேட்கப்பட்டபோது ‘இலங்கையில் இருந்து ஒரு நபர் தகவல் கொடுத்ததாகச் சொன்னார். அது யார், ஏன் குறிப்பாக சுவாமிக்கு தகவல் கொடுத்தனர் என்று கேட்டதற்கு பதில் இல்லை.ஏன்?

5. ’ராஜீவ் கொலை பற்றி முன்னரே சோனியாவுக்குத் தெரியும்’ என்று சுப்பிரமணியசுவாமியே ஒரு பேட்டியில் சொன்னார். மற்றவர்கள் மேல் பொடா தடா பாய்ச்சும் காங்கிரஸ், இதைக்கேட்டபின்னும் சுவாமியை ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க பயந்தது ஏன்?

6. சாதாரண குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரையே வெளிநாடு செல்ல அனுமதிக்காத அரசு, இந்த முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட சந்திராசாமி 2007ல் வெளிநாட்டுக்கு ஓட அனுமதித்தது ஏன்?

7. ஜெயின் கமிசன் ‘ சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை மேலும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லையே..ஏன்?

8. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? அமெரிக்க சி.ஐ.ஏ. ஏஜண்ட் என்று வர்ணிக்கப்படும் சுப்பிரமணிய சுவாமியின் பங்கும் இதில் உறுதிப்பட்ட நிலையில். அமெரிக்க சதி பற்றி ஏன் விசாரிக்கவில்லை? இந்திய அரசு பயந்ததா?

Wednesday, March 2, 2011

உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளையின் மரணம் தற்போது வடக்கில் என்ன நடக்கிறது என்பதை யாதொரு குழப்பமும் இல்லாமல் சொல்லிவிட்டு போயிருக்கிறது.

முற்காலங்களில் ஒரு பட்டி மன்றம் நடக்கும் இறந்தவர்களை எரிப்பது நல்லதா இல்லை புதைப்பது நல்லதா என்று.. சிறீலங்காவில் பிறந்திருந்தால் அவரை எரிப்பதே நல்லது என்று மாவீரர் புதைகுழிகள் தோண்டப்பட்ட பின்னர் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இப்போது பார்வதிப்பிள்ளையின் அஸ்தியை கிளறி எறிந்து, அதில் மூன்று சுடலை நாய்களையும் சுட்டு வீசியிருக்கிறார்கள் என்றால் எரிக்கவும் முடியாத அவலம் வந்துள்ளது என்பதே பதிலாகிறது.

நமக்குக் கறுப்புக் கொடி பிடிக்க உரிமை உண்டு, இறந்துபோன ஒருவருக்காக கட்டவுட் வைக்க உரிமையுண்டு என்று சொன்னவர்கள் எல்லாம் வாய்மூடி வாழ வேண்டும் என்ற எச்சரிக்கை இந்த நிகழ்வின் மூலம் விடப்பட்டுள்ளது. தமிழன் வாய்திறந்தால் அவன் தெரு நாயைப்போல சுடப்படுவான், அதைக் கேட்க இன்று உலகில் நாதியில்லை என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று புதுமாத்தளனிலும், முள்ளிவாய்க்காலிலும் தமிழர்கள் நாய்கள் போலச் சுடப்பட்டபோது உலகம் சும்மாதானே இருந்தது, இனி மட்டும் என்ன வாழப்போகிறது என்ற மமதை இந்தச் செயலில் தெரிகிறது.

அதோ எகிப்தில் மக்கள் மீது சுடுகிறார்கள் என்றும், இதோ லிபியாவில் 200 பேர் செத்துவிட்டார்கள் என்றும் ஓலமிடும் உலக மக்கள், .நா செயலர் யாவரும் ஈழத்தில் தமிழனுக்கு அவலம் நடந்தபோது உறைந்துதானே கிடந்தார்கள். ஓர் இலட்சம்பேர் வன்னியில் கொல்லப்பட்டபோதும் ஒன்றும் நடக்காதது போல செத்துக்கிடந்தது உலக சமுதாயம். உலகத்தில் உள்ள ஒரு நாயும் நமக்காக வராது என்ற உண்மை தெரிந்து ஈழத் தமிழனுக்காக நீதிகேட்க வந்தவை வல்வை ஊறணிச் சுடலையில் வாழ்ந்த மூன்று சுடலை நாய்களே. தமிழனுக்காக குரைத்த காரணத்தால் அவையும் சுடப்பட்டு பார்வதியம்மாவோடு எரிக்கப்பட்டுவிட்டன. நாயும் கேட்க நாதியில்லா இனம் என்ற நிலையில்தான் இன்றைய தமிழனின் அவல வாழ்வு இருக்கிறது என்ற உண்மையைப் பார்வதியம்மாவின் அஸ்த்தி .நா செயலர் பான் கி மூனுக்கு அழுத்தம் திருத்;தமாக சொல்லியுள்ளது.

நாயிற்கடையாய் கிடந்த அடியேர்க்கு அருளும் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே என்ற சிவபுராணப் பாடல் பார்வதி அம்மா சுடலையில் கிடந்தபோது கேட்டது. இப்போதோ சிவன் உறையும் சுடலையில் நாய்களே வாழ முடியாத நிலை வந்துள்ளது. தாயிற்சிறந்த தயாவான தத்துவன் வந்திருந்தாலும் அவனுக்கும் இதுதான் கெதி..!

புதுமாத்தளன் போருக்குப் பின்னர் தமிழன் வாழ்வு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கிறது என்பதே உண்மையாகும். இலங்கைத் தீவில் வாழும் தமிழர் இதுவரை எதையும் பெற்றுவிடவில்லை, ஒரு பிடி சாம்பலைக்கூட

ஒரு பிடி சாம்பலுக்கே உரிமையில்லாத நிலைக்கு உலக சமுதாயத்தால் ஆளாக்கப்பட்ட ஈழத் தமிழன் இனி..

நாம் பான் கி மூனிடமும், பக்கத்து நாட்டு பாராளும் மன்னர்களிடமும் போவதற்கும், பெறுவதற்கும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை..

பார்வதி அம்மாவிற்காக போராடி உயிர் கொடுத்த மூன்று நன்றியுள்ள நாய்களுக்கு மட்டும் சிரந்தாழ்த்தி மரியாதை செலுத்துகிறோம்.. உறங்கிக் கிடக்கும் உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் மூன்று கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை..

வெளிச்சத்துக்கு வராத போர்குற்ற சந்திப்பின் இரகசியங்கள்

இலங்கை அரசாங்கம் அனுப்பிய உயர்நிலைப் பிரதிநிதிகள் குழு .நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு ஜெனிவா கிளம்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் உச்சக்கட்ட சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கின்ற நிலையில் தான்- எதிர்பாராத இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

இந்தச் சந்திப்பு எதற்காக நடந்தது? இதில் பேசப்பட்ட விடயங்கள் என்ன? – எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? எல்லாமே மர்மமாகத் தான் உள்ளது. அதற்குக் காரணம் இது அதி உச்ச இரகசியம் பேணப்பட்ட ஒரு சந்திப்பு என்பது தான்.

இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் றொமேஷ் ஜெயசிங்கவும், சட்டமா அதிபர் மொகான் பீரிஸும் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்று நியூயோர்க்கை அடைந்த வரை இதுபற்றி வெளியே மூச்சுக் கூடவிடவில்லை.

பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா கூட அதை அறிந்திருக்கவில்லை என்கிறது ஒரு தகவல். அதனால் தான் அப்படியான சந்திப்புத் திட்டங்கள் ஏதும் கிடையாது என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் உச்ச இரகசியம் பேணப்பட்ட இந்தச் சந்திப்புத் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த விரும்பாமல் அவர் அப்படிக் கூறியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

நியூயோர்க்கில் உள்ள .நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன ஊடாகவே வழக்கமாக இலங்கை அரசுக்கான .நாவின் தகவல்கள் பரிமாறப்படும்.

ஆனால் இம்முறை நேரடியாகவே கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சைத் தொடர்பு கொண்டு, இலங்கை அரசுடன் பேச விரும்பும் தகவலைத் தெரிவித்துள்ளது.

இதனால் தான் வெளிவிவகாரச் செயலரும், சட்டமா அதிபரும் இரகசியமாக - நியூயோர்க் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்கள் நியூயோர்க் சென்றடைந்த பின்னர், சந்திப்புத் தொடர்பாக பாலித கொஹன்னவின் அலுவலகத்துக்கு .நாவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.

பாலித கொஹன்னவுடன் .நாவுக்கான பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.

எல்லாமே இரகசியமாகப் பேணப்பட்ட போதிலும் இன்னர் சிற்றி பிரஸ் அதை மோப்பம் பிடித்துக்கொண்டது.

நாளை சந்திப்பு நடக்கவுள்ளது' என்று அது கடந்த செவ்வாயன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அதை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நிராகரித்தார்.

அவர் அப்படிக் கூறியிருந்த போதும் மறுநாள் இன்னர் சிற்றி பிரஸ் சொன்னது போலவே சந்திப்பு நடந்தது. அந்த இரகசியச் சந்திப்பின் படங்களையும் இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாக வெளியிட அது பரகசியமானது.

ஆனாலும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட உண்மையான விடயங்கள் பல வெளிவரவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் .நாவும் சரி, இலங்கை அரசும் சரி இந்தச் சந்திப்புத் தொடர்பாக வெளியிடுகின்ற செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவே உள்ளன.

இன்னர் சிற்றி பிரஸ் படங்களுடன் சந்திப்பை அம்பலப்படுத்திய பின்னர், உடனடியாகவே இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சட்டமா அதிபரும், வெளிவிவகாரச் செயலரும் சட்ட ஆலோசனைக்காக நியூயோர்க் சென்றிருந்தனர் என்றும் அப்போதே .நா பொதுச்செயலரை சந்தித்துப் பேசியதாகவும் அந்த அறிக்கை கூறியது.

ஏதோ போன வழியில் அவரைக் கண்டு பேசியது போல அமைந்திருந்தது அந்த அறிக்கையின் சாரம். ஆனால் இந்தச் சந்திப்பு முன்னரே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று.

இந்த விடயத்தில் .நா. பொதுச்செயலரின் அழைப்பின் பேரிலேயே இலங்கை அரசு தமது பிரதிநிதிகளை அனுப்பியதாக செய்தியை வெளியானால் அது தரக்குறைவாக அமைந்து விடும் என்று அரசாங்கம் நினைத்திருக்கலாம். அல்லது இந்தச் சந்திப்பின் உண்மைப் பரிமாணங்கள் வெளிவருவதைத் தடுக்க அது விரும்பியிருக்கலாம்.

அடுத்து இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று இலங்கை அரசாங்கம் தெளிவாகக் கூறவில்லை. சட்டம் சார்ந்த விடயங்கள் குறித்துப் பேசப்பட்டது போன்று மேலோட்டமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால், .நா பொதுச்செயலரின் பேச்சாளார் மார்ட்டின் நெவ்ஸ்கி, இலங்கையில் போருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகள் தொடர்பாகவே ஆராயப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இங்கேயும் இருதரப்பும் முரண்பாடானதும், குழப்பமானதுமான தகவல்களையே வெளியிட்டன.

அதேவேளை இப்போது கிடைக்கும் தகவல்கள், இந்தச் சந்திப்பின் அடிப்படை நோக்கம் .நா நிபுணர்கள் குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகக் கலந்துரையாடுவதே என்று கூறுகின்றன.

.நா நிபுணர்கள் குழு இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. வேண்டுமானால் அவர்கள் வந்து நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கலாம்- அதற்கு அப்பால் விசாரணை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தது அரசாங்கம். இதன் காரணமாக இதுவரை அந்தக் குழு இலங்கை வரவில்லை.

ஆனால் .நா பொதுச்செயலரோ நிபுணர்குழு இலங்கை செல்லும், அதற்கு வழி பிறந்து விட்டது, அங்கு செல்வது பற்றி ஆராய்கிறது என்றெல்லாம் அவ்வப்போது கூறி வந்தார். ஆனாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்தக் கட்டத்தில் .நா நிபுணர்குழுவின் பணிக்காலம் முடிவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வாரம் அதன் அறிக்கை கையளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையை .நா பொதுச்செயலர் பகிரங்கப்படுத்துவாரா என்பது முக்கியமான கேள்வி.

அதேவேளை இந்த அறிக்கை ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள .நா மனித உரிமைகள் பேரவையின் 16வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தநிலையில் தான் .நா பொதுச்செயலர் இலங்கை அரச பிரதிநிதிகளைப் பேச்சுக்கு அழைத்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்தை இராஜதந்திர வழிகளில் மிரட்டுவதற்காக அவர் இந்த அழைப்பை விடுத்தாரா அல்லது வேறேதாவது நோக்கங்கள் இருந்ததா என்பது மர்மமாகவே உள்ளது.

ஆனாலும் அரசாங்கம் அனுப்பிய குழு, நல்லிணக்க ஆணைக்குழு போற்றதக்க வகையில் செயற்படுவதாக .நா பொதுச்செயலரிடம் கூறியிருக்கிறது.

பான் கீ மூனை நம்ப வைக்கும் அளவுக்கு அது நடந்து கொண்டிருப்பதாகத் ஊடகச் செய்திகள் கசிகின்றன.

இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு .நா பொதுச்செயலர் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாரா அல்லது தாம் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு முக்கியம் அளிக்கப்போகிறாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இந்தச் சந்திப்பின் மூலம் இலங்கை அரசு தமக்குச் சார்பான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.

அதேவேளை, இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட முக்கியமான மூவர் பற்றிய சர்ச்சைகளும் தொடர்கின்றன.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.

அவருடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள பாலித கொஹன்னவும் .நா பொதுச்செயலரைச் சந்தித்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் .நாவின் உத்தரவாதத்தின் பேரில் சரணடைய முன்வந்த புலிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள .நா பொதுச்செயலரின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியாரும் இந்தச் சந்திப்பில் கூடவே இருந்துள்ளார்.

இவர் மீதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ச்சைகள் நிரம்பிய மனிதர்கள் மத்தியில் .நா பொதுச்செயலர் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.

அதுவும் கூட சர்ச்சைகளும், சந்தேகங்களும் நிறைந்த ஒன்றாகவே இருந்துள்ளது.

இந்தச் சந்திப்பு யாருக்கு ஆதாயம் தேடுவதற்காக நடத்தப்பட்டது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

இலங்கை அரசுடன் முட்டி மோதி வந்த .நா பொதுச்செயலர்- தான் பணிந்து போவதற்காக இந்தச்சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாம். அல்லது இலங்கை அரசை மிரள வைக்கவும் அவர் இப்படியான சந்திப்பை நடத்தியிருக்கலாம்.

இப்போது இந்தச் சந்திப்புத் தொடர்பான பல இரகசியங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும் அது விரைவிலேயே வெளிச்சத்துக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நன்றி: தமிழ்மிரர்

Monday, November 29, 2010

பவானி ஆற்று தண்ணீருக்கான தண்டத்தீர்வை ரத்து

50 ஆண்டு போராட்டத்துக்கு முடிவு:
 


பவானிசாகர் அணை முதல் பவானி கூடுதுறை வரையிலும் பவானி ஆற்றங்கரையில் மோட்டார் வைத்து, தங்கள் நிலங்களுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகின்றனர். இப்படி அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதற்கு தண்டத்தீர்வை போட்டு விவசாயிகளிடம் அரசு பணம் வசூல் செய்து வந்தது.

கடந்த 50 வருடமாக மஞ்சள், கரும்பு, வாழை, நெல் சாகுபடி செய்த விவசாயிகளிடம் முதல் வருடம் ஒரு ஏக்கருக்கு ரூ.220 வீதம் வசூல் செய்யப்பட்டது.

இரண்டாது வருடம் ஏக்கருக்கு ரூ.440 எனவும் இப்படி வருடத்துக்கு வருடம் ஒவ்வொரு மடங்காக தண்டத்தீர்வையை உயர்த்தி தற்போது ஏக்கருக்கு ரூ.1000 வரை வசூலிக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்தத் தண்டத்தீர்வையை ரத்து செய்ய வேண்டும் என 50 வருடங்களாக அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் போராடி வந்தனர். சத்தியமங்கலம் பவானி நதிநீரேற்றுப் பாசன சங்கம், ஜம்பை, தளவாய்ப்பேட்டை விவசாய சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

சங்கப்பிரதிநிதிகள் சத்தியமங்கலம் எம்எல்ஏ தர்மலிங்கத்திடமும் கோரிக்கை மனு கொடுத்து முறையிட்டனர்.
இதனையடுத்து விவசாயிகளை அழைத்துச் சென்று வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி, சட்டஅமைச்சர் துரைமுருகன் ஆகியோரை எம்எல்ஏ தர்மலிங்கம் சந்தித்து தண்டத்தீர்வையை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த 4 வருடங்களாக எம்எல்ஏ எடுத்த முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை தண்டத்தீர்வையாக பல மடங்கு தொகை வசூலிப்பதை ரத்து செய்து, வருடத்துக்கு ஒரு முறை ஏக்கருக்கு ரூ.200 மட்டுமே இனி வசூல் செய்யப்படும் என அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

Friday, October 15, 2010

குட்டி கதைகள்

கொடுத்துப் பெறுதல்

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.


உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது


மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.
"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

Saturday, February 07, 2009

'பச்சோந்தி'க் கல்

நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"

தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"

ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.

கை மேல் பலன் கிடைத்தது !

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.
மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.
சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!


காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது

இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். 'நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே' என்றான் அவன்.


வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.


நன்றி:  

Sunday, October 10, 2010

என்னைக் காணவில்லை





அன்புள்ள
அம்மா அப்பாவுக்கு
கண்ணுக்கு தெரிந்தாலும்
உங்கள்
கண்ணில் படாத கண்மணி
எழுதும் கண்ணீர் மடல்

 
இங்கு
என்னுடன் இருக்கும்
பெற்றோர்கள் இருந்தாலும்
அனாதைகளான அரும்புகள் நலம்
பிள்ளை பெற்றாலும்
மலடுகளான நீங்கள் நலமா ?

என்னால்
வளர்க்கப் பட்ட
பூனைக் குட்டிக்காவது
உங்கள்
அன்பு முழுமையாகக் கிடைக்கட்டும்
எனக்கு ஊட்டாத
பாலும் பிஸ்கட்டும்
அதற்காவது கிடைக்கட்டும்
அந்தப்
பூனைக்கு
என் வணக்கத்தைச் சொல்லுங்கள்


கதகதப்பான மையிருட்டில்
தொப்புள் கொடி சுவாசத்தில்
கைமடக்கி கால்மடக்கி
இல்லாத சிந்தனையிலிருந்து
மீண்டு பிறந்தபோது
வாய்விட்டு
அழுதது ஏன் தெரியுமா ?

கண்களை குத்திய
வெளிச்சத்தைக் கண்டு அல்ல
சுவாசக் கோசத்தில்
புத்தம் புதிதாக
நுழைந்த காற்றுத் தந்த
குறுகுறுப்பாலும் அல்ல

என் கண் முன்னால்
படம் எடுத்து நின்ற
கேள்வி குறியை கண்டு
அந்த குறி கேட்ட
புரியாத கேள்வியை பதிலாக்கவே
இந்த கடிதம்


உருண்டு புரண்டு
தவழ்ந்து
நடைவண்டி பழகி
விழுந்து எழுந்து
அழுது
கைதட்டி சிரித்து
உங்கள்
மடியில் கிடக்க வேண்டிய நான்
காப்பகத்தில்
ஆயா
திணிக்கும் பால் புட்டியை
முச்சுத் திணரத் திணர
உறிஞ்சி
  விட்டு
வயிற்றை
சுமக்க முடியாமல்
மல்லாந்துக் கிடக்கிறேன் 


வாய்வலிக்காத
அம்மாவின் மார்பும்
கன்னம் பதிக்க
அப்பாவின் தோளும்
கனவில் மட்டுமே
வந்து வந்து மறைகிறது
நிஜத்தில் இருந்தும்
நிழலை நேசிக்கும்
சுபாவம்
அப்போதே அரும்பி
விட்டது

அப்பா !
நீ
சின்னவனாய் இருந்தபோது
தொட்டிலில் இட்டு
ஆராரோ ஆரிராரோ
பாடி தாலாட்டினாளாம் பாட்டி
கைவீசம்மா கைவீசு
என கொஞ்சினாளாம் அத்தை
நீ
தளர்நடை பயின்று
நெஞ்சில் ஏறி கைகொட்டி
குதித்தப்போது
சங்குச் சக்கர சாமிவந்து
ஜங்கு ஜங்குன்னு ஆடுதாம்மென
சந்தம் படித்தாராம் தாத்தா
நான் தாலாட்டும் கேட்டதில்லை
தொட்டிலில் ஆடியதும் இல்லை
அத்தை முகம் பார்த்ததில்லை

தாத்தா பாட்டியென்றால்
யாரப்பா?
அவர்களுக்கும் நம்மைப் போன்ற
உருவம்தான் இருக்குமா?
அல்லது அவர்கள்
உன்பேச்சிலும் என்கனவிலும்
வந்துபோகும்
பூதங்களா பூச்சாண்டிகளா?
அம்மா !
சாணம் பூசியத்தரையில்
உடம்பெல்லாம் புழுதிப்பட
உருண்டு புரண்டு
மிட்டாய்காக அழுவாயாமே

மரப்பாச்சி பொம்மைக்கு
தலைவாரி
பூச்சூடி பொட்டிட்டு
உன்னோடு
கூடவே உறங்க வைப்பாயாமே

உன்னம்மாவின்
புடவைத் தலைப்பை கிழித்து
தாவணி போட்டு
கதவுக்கு பின்னால் பதுங்கி
நின்று சிரிப்பாயாமே

பள்ளிக்கூட
புத்தகப் பையில்
புளியங்காயும் மிளகாய்த்தூளும்
வைத்ததனால்
அடித்த ஆசிரியரை

கெட்ட வார்த்தையால் திட்டினியாமே

என்னநீ செய்தாலும்
என்பொண்ணுக்கு
குறும்பு
கொஞ்சம் ஜாஸ்தி என்று
உன்னப்பா
அணைத்துக் கொள்வாராமே

அப்பா என்றால்
அடிப்பவர் என்றுதான்
எனக்குத் தெரியும்
அவரால்
அணைக்கவும் முடியுமா?
அதுவெல்லாம்
இருக்கட்டும் அம்மா
குறும்பு குறும்பு என்கிறார்களே
அப்படியென்றால் என்ன ?

ஒருவர்
கண்ணைமூடி
எண்களை எண்ண
மற்றவரெல்லாம்
ஓடிஒளிந்துக் கொள்வது
கண்ணாமூச்சி ஆட்டமாம்
ஒருத்தர்
சட்டையை இன்னொருத்தர்

பிடித்து ஓடுவது
ரயில்வண்டி ஓட்டமாம்

ஆற்றங்கரை ஓரம்
மணலை குவித்து வைத்து
நடுவில் ஓட்டை வைத்தால்
அதுதான் வீடுகளாம்
களிமண்ணை பிசைந்து
உருட்டி விரலால்
துளையிட்டால் சட்டிப் பானைகளாம்

கருவேலம் முள்ளில்
பனையோலையை செருகினால்

காற்றாடியாம்
காகிதத்தை
மடித்து மிதக்க விட்டால்
கத்திக் கப்பலாம்

இன்னும்
என்னனென்வோ
பெயர் சொல்ல முடியாத
உல்லாச ஆட்டங்களாம்
இத்தனையையும்
நீங்கள் பார்த்திருக்கிறீர்களாமே
எனக்கு ஒருமுறை
டி.வி.யிலாவது காட்டக் கூடாதா?

இவையெல்லாம்
நிகழ்வதற்கு
பெரிய இடம் வேண்டுமே
அப்போதெல்லாம்
வீடுகளே இல்லையா?
அல்லது
எல்லோரும் மைதானத்தில்தான்
தூங்குவீர்களா

சுமைதூக்கும் தொழிலாளிக்கு
போனஸ் வேண்டுமென ஆங்கிலப்
பத்திரிக்கையில்
  கட்டுரை
எழுதியிருந்தீர்கள்
சுமப்பது சுலபம் அல்ல
பெரிய கஷ்டம்தான்

சுமைதூக்கும் எல்லோருக்கும்
போனஸ் வேண்டும் என்றால்
எனக்கும்தான் முதலில் வேண்டும்
தினம்தினம்
 நான்
சுமக்கும் புத்தகச் சுமை
அரிசி மூட்டையவிட
கனம்குறைந்ததா என்ன?
ஊரான்
கஷ்டமெல்லாம்
உன் கண்ணில் படுகிறது
உன்பிள்ளை
துன்பம்
ஏன் உனக்கு தெரியவில்லை அப்பா

தன்வீட்டை
தானே சுமக்கும்
ஆமைபோல்
என்முதுகு வளைந்து கிடக்கிறது

ஃபிரட்டும் ஜாமும்
தின்றுதின்று
வயிறும்
கல்லாகிக் கிடக்கிறது

கம்ப்யூட்டர்
 
திரையையே
பார்த்துபார்த்து
கண்களிரண்டும் பூத்துக்கிடக்கிறது

முதுகுவலி தீர
அம்மாமேல்
உருண்டு எழவேண்டும்

வயிற்றுக்
கனம்தீர
ஒருகவளம் சோறுவேண்டும்

கண்கள் குளிர
அப்பா
உன்முகத்தை பார்க்க வேண்டும்
விடுதியின்
மூட்டைப் பூச்சியும்
கொசுக்களும் இல்லாமல்
ஆசிரியையின் மிரட்டும்
முகம்காணாது
ஒரு நாளாவது
நிம்மதியாய் தூங்க வேண்டும்

ஒருநாள் கனவில்
கடற்கரை ஓரம்
கால்வலிக்க ஓடுகிறேன்

கல்லும் முள்ளும்
நிறைந்த பாதையில்
ரத்தம் சொட்டச்சொட்ட
நடக்கிறேன்

வெளிச்சம்
இல்லாத
காட்டிற்குள் அலைகிறேன்
கரடிப் புலிகளையும்
கண்டு மிரளுகிறேன்

அருவியில்
  விழுந்து
ஆற்றில் மூழ்கி
சுழலில் சிக்கி
பாறையில் மோதி
மொத்தப்படுகிறேன்

கொதிக்கும் எண்ணெய்
கொப்பரையில் கிடந்து துடிக்கிறேன்
நாலாபுறமும்

ஈட்டி நெறுங்கும்
சிறைச்சாலைக்குள் மாட்டிக் கொள்கிறேன்
வயிற்றில் பல்முளைத்த
குள்ள பூதங்கள்
என்னைத்
தூக்கிப்போட்டு பந்தாடுகின்றன

அலறலும்
அழுகையுமாய்
எதையோ
ஒன்றை நான் தேடுகிறேன்
கருவறை முதற்கொண்டு
என்னோடு இருந்த
அந்த
எதோ ஒன்றை
காணவில்லை
அது
எதுஎனவும்
எனக்குத் தெரியவில்லை
ஆயினும்
இன்னும் கடினமான
வழியிலெல்லாம்  தேடித்தேடி அலறு
கின்றேன்


தேடுவது எதுவெனத்
தெரிந்தாலாவது நிம்மதிக் கிடைக்கும்
இருண்டக் காட்டிற்குள்
குருட்டுக் கண்களுடன்
மீண்டும் மீண்டும்
முட்டிமோதி தேடுகிறேன்

திடீரென
காற்று ஒன்று வீசியது
அந்தக் காற்றில்
சிறகுகள் முளைத்த
அம்மா மாதிரி
அழகான பெண்ணொருத்தி வந்தாள்

கண்ணே!
நீ
தேடுவது தொலைத்துவிட்ட உனது
குழந்தைத்தனம் என்றாள் 

 எனக்கு இன்னும்
பத்து வயது பிறக்க வில்லை
குழந்தைப் பருவம் மாறவில்லை
அப்போது
எப்படி குழந்தைத் தனத்தை தொலைத்தேன்

நீனாகத்
தொலைக்க வில்லை
உன்னிடம் இருந்து
அதை மற்றவர்கள்
பறித்துக் கொண்டனர்
எனக்கூறி
அப்பெண்ணும்
மறைந்து விட்டாள்

அந்தக்கனவு
முடிந்து இந்தநிமிடம் வரை
யோசித்துக் கொண்டே இருக்கிறேன்
என்
குழந்தைத்தனத்தை
எப்போது எங்கு எப்படித் தொலைத்தேன்

சுற்றிவிட்ட பம்பரம்போல்
சிந்தனைச் சுழலுகிறது
வற்றிவிட்டக் குளத்திற்கு
கொக்குகள் வராததுபோல
விடையும் வரவில்லை

அதனால்தான்
இந்தக்
கடிதம் எழுதுகிறேன்

ஒருநாள்
விடிந்தும் விடியாதக்
காலைப் பொழுதில்
அட்டைப்பூச்சிப்போல்
அம்மாவை கட்டிப்பிடித்து தூங்கிய
என்னை
வலுக்கட்டாயமாய்
தூக்கி குளிக்க வைத்து
அழஅழ பாலர்வகுப்பின்
படிக்கட்டில் கொண்டு விட்டீர்களே
அப்போது
தொலைத்திருப்பேனா

தெருவில் இறங்கி

மிட்டாய் எச்சில்
முழங்கையில்
வழிய
நடந்த நேரம்
வீட்டிலிருந்து
ரைம்ஸ் படியென
இழுத்து வந்தீர்களே
அப்போதுதான்
தொலைந்திருக்குமா

புதிதாய் வாங்கிய
நாய்குட்டி பொம்மையை
பப்லுக்கு காட்ட
எடுத்துப் போகும்போது
டியூஷனுக்கு போவென
துரத்தி
  விட்டீர்களே
அப்போது
தொலைந்திருக்குமோ

நம்வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த ரோஜாவில்
வந்து உட்கார்ந்த
வண்ணத்துப் பூச்சியை
தொட்டுப்பார்க்க ஓடி
கீழே விழுந்து
உடையெல்லாம் சேறான போது
அடித்தீர்களே
அப்போது தொலைந்திருக்குமோ 


அட!
தேவதை நான் தொலைத்ததாகச்
சொல்ல வில்லையே
யாரோ
எடுத்ததாகத் தானே சொல்லியது

அம்மா
உன்னை ஒன்று கேட்கிறேன்
கோபப்படாதே
அன்றொரு
நாள்
நீ செய்த
முந்திரி அல்வாவை
பக்கத்து வீட்டுச் சீனுவுக்கு

கொடுக்க எடுத்தபோது
திட்டி பிடுங்கிக் கொண்டாயே
அப்படி
என் குழந்தைத்தனத்தையும்
பிடுங்கி
எங்கோ மறைத்து வைத்திருக்கின்றாயோ

அப்பா
வீட்டுப்பாடம் செய்யாமல்
காந்திஜி படம்
வரைந்தபோது
அதைப் பிடுங்கி தூர எரிந்தாயே
அப்படி
இதையும் எங்கோ எரிந்துவிட்டாயோ

நீங்கள்
இருவரும் எடுக்கவில்லை என்றால்
என்
குழந்தைத்தனத்தை வேறு யார் எடுப்பார்?

உதட்டுக்குச்
சாயம்பூசி
ஒய்யாரமாய்
நடந்துவரும்
கணக்கு டீச்சரையும் கேட்டேன்
எடுத்ததற்கெல்லாம்
கம்பைத் தூக்கும்
பூகோள
வாத்தியாரையும் கேட்டேன்
அந்தப்பீஸ்
இந்தப்பீஸ் என
பணத்தையே கொத்தும்
பள்ளி நிர்வாகியையும் கேட்டேன்
எல்லாம் தெரிந்தும்
தெரியாததுபோல்
மௌனமாய்
எழுந்து நிற்கும்
பள்ளிக் கட்டிடத்தையும் கேட்டுவிட்டேன்
எல்லோரும்
மௌனமே சாதிக்கின்றனர் 

 நீங்களும்
அப்படி இருக்கலாமா
பெற்றப் பிள்ளையின்
கேள்விகளுக்கு
பதில்சொல்ல வேண்டியது
பெற்றவர்களின் கடன் அல்லவா?