ஐ.பி.எல் ஆட்டங்கள் போகும் பாதையப் பார்த்தால் கிரிக்கெட் உருப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. வெகுநாட்களாகவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்கள் கடவுள்களாகவும், மற்றவர்களை சார்லி, வையாபுரி லெவலுக்கு வைத்துப் பார்க்கும் நிலையே இருந்து வந்தது. அதுவும் பல போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் ஒரு படி மேலே கீழே போய் காமெடி பீஸாகவே மாறிவிடுவார்கள்.
சூப்பர்கள் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். பந்துவீச்சாளர்கள் உருப்படியாக பந்துவீசினால் ஆட்டத்தை முழுமையாகவே கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்.
அதுவும் ஒரு பந்துவீச்சாளர் மட்டும் கூட தனது நான்கு ஓவர்களை ஒழுங்காகப் போட்டால் அவர் உடன் வீசப்படும் ஓவர்களையும் சேர்த்து எட்டு ஓவர்கள் கூட முழுமையாக கட்டுப் படுத்தப் பட்டு விடுகிறது,அதைத்தான் முரளி நிகழ்த்தினார். . இந்த கட்டத்தில் களத் தடுப்பாளர்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை பெருகி அவர்களும் கூட வேலை ஒழுங்காக செய்ய ஆரம்பித்தால் சுலபமாக ஆட்டத்தை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது.
கடைசி ஓவரை உருப்படியாக போட்டால் கூட போதும். அண்ணன் ஜோகிந்தர் டோனியை கேப்டன் வேலையில் நிரந்தரம் ஆக்கியது கூட அப்படித்தான்.
ஆட்டம் டையில் முடிந்தால் கூட சூப்பர் ஓவரை கொஞ்சம் கவனத்துடன் போட்டால் சுலபமாக வெல்ல முடியும். ஆக மட்டையாளர்கள் கையிலிருந்த ஆட்டம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீச்சாளர்களுக்கும் மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
சூழ்நிலை சமநிலையியல் விதிகளின்படி அனைத்தும் சமநிலையில் இருந்தால் மட்டுமே அந்த சூழல் நிலைத்து நிற்கும். இது அறிவியல், வரலாறு, புவியியல் ரீதியாக பலமுறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.
கிரிக்கெட்டில் மட்டையர்கள் மட்டும் மன்னர்களாக இருந்த நிலைமாறி பந்துவீச்சாளர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்க ஆரம்பித்திருப்பதால் கிரிக்கெட் உருப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Stupid Thoughts......... There is no combination for Ur title and ur story..... So At least From Now Read Carefully And Write the thoughts..... Since For The Past 2 Year U Have The Same Team....... But There Is No Worries For Ur Team........ So Dont Make Fool Out Of Other....... Just Be A Practical Man Not An Over Thoughtful guy To make Others Fool.....
ReplyDelete